TamilsGuide

யாழில் கடும் காற்று – 67 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக 20 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தரவுகளின்படி இதில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் புலோலி நாகதம்பிரான் ஆலயமும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட உரும்பிராய் சைவத் தமிழ் பாடசாலையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment