TamilsGuide

ஜனாதிபதித் தேர்தல் - முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் (20)  வரையிலும் மொத்தமாக  717 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment