TamilsGuide

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் - எனது ஆட்சியில் உண்மைகள் வெளிக்கொணரப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மர்மங்களை சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் நடத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது ” உயிர்த்த ஞாயிறு தாங்குதலில்
உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதாகத் தெரிவித்து ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷ, மக்களை ஏமாற்றும் வகையில் செயற்பட்டார்.

அவரைத் தொடர்ந்து ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவும் அதே பாதையில் சென்றுள்ளார். குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னணி தொடர்பான உண்மையை வெளிப்படுத்தாதிருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி மக்களின் ஆணையுடன் அமைக்கப்படும் அரசாங்கத்தில் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் உள்ள சகல உண்மைகளும் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.

இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினரைப் பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் நாம் உறுதியளித்துள்ளேன்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment