TamilsGuide

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் விசேட அறிவிப்பு

கடும் மழை படிப்படியாக குறைந்துள்ள போதிலும், இடையிடையே பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மக்கள் பாதிகப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புத்தளம் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனால் 2,418 குடும்பங்களைச் சேர்ந்த 8,582 பேர் அவதியுறுவதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக 2,418 குடும்பங்களைச் சேர்ந்த 8,582 பேர் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவின் 5 பிரதேசங்களில் 586 குடும்பங்களைச் சேர்ந்த 2059 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஹலவத்தை பிரதேச செயலகப் பிரிவின் 4 கிராம உத்தியோகத்தர் களங்களில் 530 குடும்பங்களைச் சேர்ந்த 2070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள மஹவெவ, முந்தலம, ஆராச்சிக்கட்டுவ, தங்கொடுவ, வென்னபுவா, மஹகும்புக்கடவல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment