TamilsGuide

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது-சரத் பொன்சேகா

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது என்றும் அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமித்து நாடாளுமன்றத்தில் உள்ள திருடர்களை அகற்றி ஊழல் நிறுவனங்களை சுத்தப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி சே றதுனை தரிசனம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊழல் அரசியல் கலாசாரத்தின் விளைவுகளால் நாடு சூழப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையிலிருந்து விடுபட அனைவரும் சுதந்திரமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட்டு நாட்டை தேசியத் தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரே குழுக்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளை உருவாக்கி மக்களிடம் வந்தாலும் அவர்களின் மனநிலை மாறவில்லை என்றும் அவர்கள் நாட்டைப் பற்றியோ நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியோ சிந்திப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 

Leave a comment

Comment