TamilsGuide

பதவியை இராஜினாமா செய்தார் தலதா அத்துகோரள

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் , இரத்தினபுரி மாவட்ட மக்கள் தனக்களித்த ஆதரவுக்காக நணடறியையும் தெரிவித்ததுடன் ரணிலும் சஜித்தும் இணைந்து நாட்டை முன்னேற்றக்கூடிய ஒரு திட்டத்தை தான் உட்பட்ட தரப்பு முன்வைத்தபோதும் அது சாத்தியப்படாமை குறித்து தனது உரையில் தெரிவித்திருந்தார்

மேலும், 2010, 2015 மற்றும் 2020 பொதுத் தேர்தல்களில், அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்றுநாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment