TamilsGuide

உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை- கொக்குத்தொடுவாயில் பல புதை குழிகள் இருக்கிறது-ரவிகரன்

கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் நேற்றைய தினம்  கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்பாக இந்த விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயம் பற்றி ஆரம்பத்திலே நீதிமன்றத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போது பலராலும் வைக்கப்பட்ட கோரிக்கை, சர்வதேச பொறிமுறையோடு சர்வதேசத்தினுடைய கண்காணிப்பே வேண்டும் என்பது என சுட்டிக்காட்டினார்.

யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீட துறையினை சேர்ந்த மாணவர்களோ, பேராசிரியர்களோ இந்த கண்காணிப்பில் பார்வையிடுதலில் இருக்க வேண்டும். அந்த கோரிக்கைகள் பலவாறாக முன் வைக்கப்பட்டது. இருந்தும் இவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இல்லை.  உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

எங்களை ஏமாற்ற வேண்டாம். ஆனால் சர்வதேசம் நிச்சயமாக கண்காணித்து நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment