TamilsGuide

ஆஸ்துமா நோய் அதிகரிப்பு- கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை

இத்தினங்களில் இளைப்பு நோய் (ஆஸ்துமா) அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இன்புளுவன்சா நோயாளிகளின் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், இது குழந்தையின் ஆஸ்துமாவாக இருக்கலாம் என்றும் இரண்டாவதாக, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இப்போதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் அதுபோன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment