TamilsGuide

ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 712,321 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

736,589 அரச உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பித்திருந்ததாகவும், 24,268 பேரின் விண்ணப்பங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் அரச நிறுவனங்களுக்கு தபால் மூல வாக்குகள் விநியோகம் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment