620 அடி உயரமான கட்டிடத்தின் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நாசா தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து சுமார் 2,850,000 மைல்கள் தொலைவில் இந்த JV33 என்ற இந்த சிறுகோள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 மணிநேரத்திற்கு 24,779 மைல் வேகத்தில் பயணித்து வரும் இந்த சிறுகோள், நிலவை விட 3 மடங்கு தொலைவில் இருந்தாலும் ஒப்பீட்டளவில் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரவுள்ளது. இந்த சிறுகோளை நாசா உன்னிப்பாக கவனித்து வருகிறது.