TamilsGuide

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் முன்னெடுத்திருந்தது.

கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கி இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் காணாமல் போனோர் தொடர்பாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் குடும்பங்களுக்கான விசாரணைகள் இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் காணாமல்போனவர்கள் தொடர்பாக இதுவரை பதிவு அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் இன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது

இதன்போது அதிகளவானவர்கள் வருகைதந்து விசாரணைகளை கோரியிருந்தனர்.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு யுத்தசூழ்நிலையின் போது காணாமல்போனவர்கள் மற்றும் குறித்த காலகட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகாரணமாக காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதிவுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
 

Leave a comment

Comment