TamilsGuide

திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியருக்கு 5 கோடி இழப்பீடு - எலான் மஸ்கிற்கு உத்தரவு

திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எலான் மஸ்கிற்கு அயர்லாந்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு எலான் மஸ்க் பிரபல சமூக வலை தளமான ட்விட்டரை விலைக்கு வாங்கினார். இதையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை எஸ்க் என மாற்றினர், மேலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவந்தார். இதேவேளை ஊழியர்கள் பலரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 

இவ்வாறான நிலையில், எக்ஸ் சமூக வலைதள நிறுவனத்தில் ரூனி என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் திடீரென இமெயில் வாயிலாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக ரூனிக்கு தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பாக ரூனி அயர்லாந்தில் உள்ள பணியிட தொடர்பு கமிஷன் எனப்படும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் உரிய விசாரணையின்றி பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்கின் ‛எக்ஸ்‛ வலைதள நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
 

Leave a comment

Comment