TamilsGuide

மைத்திரிபால சிறிசேன ஜக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளரா? மரிக்கார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஜக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்

ஜக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பில், முன்னாள் ஜனாதிபதியுடன் கூட்டு சேர்வதற்கோ அல்லது அவ்வாறான ஆதரவைப் பெறுவதற்கோ தேவை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமான தோல்வியை எதிர்நோக்கியுள்ள அரச தரப்பு பிரசாரக் குழுக்கள் பொய்யான செய்திகளை உருவாக்கி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
 

Leave a comment

Comment