TamilsGuide

சமூக மாற்றங்களை உருவாக்க பொதுஜன பெரமுன தயார்

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக நாட்டைப் பாதுகாக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில்முனைவோரைப் பாதுகாக்கவும் மகத்தான சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் தெரிவித்தார்.

நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாத்து நாட்டிற்கு ஏற்ற பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை உருவாக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்வதற்கு கட்சிகள் பாடுபடும் என்ற வலுவான நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment