TamilsGuide

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு

இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கவுந்திஸ்ஸ புர, ஸ்ரீபுர பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர, பிள்ளைர் சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 

Leave a comment

Comment