TamilsGuide

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனக ரத்நாயக்கவுக்கு வழங்குவதற்காக 03 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது

அத்துடன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் 06 பேரையும் தலா 20 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் ஜனக ரத்நாயக்கவிற்கு கட்சியில் இருந்து வேட்புமனு வழங்குவதற்காக இலஞ்சம் கோரும் போதே பொரளையில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவர்கள்; கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment