TamilsGuide

தேசிய காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

நாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, நாட்டில் நிலவும் பொருளாதார அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும் என இதன்போது தேசிய காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தப்பட்டது.

இதன்போது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான தேசிய காங்கிரஸின் பரிந்துரைகள் மற்றும் யோசனைகள் அடங்கிய பிரேரணை ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

Leave a comment

Comment