TamilsGuide

தெற்காசியாவில் இலங்கையில், முதன் முறையாக மூன்று நாட்களில் ஏழு விளையாட்டுப் போட்டிகள்

தெற்காசியாவில், முதன் முறையாக இலங்கையில் மூன்று நாட்களில் ஏழு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளணம் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

Sri Lanka Sports Fiesta  2024 என்ற தொனிப்பொருளில், தேசிய அளவிலான மாபெரும் விளையாட்டு பொட்டிகளும் களியாட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 18 வரை கொழும்பு குதிரைத் திடல் மைதானத்தில், பெரு விழாவாக முன்னனெப்பதற்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளமும் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளையும் தீர்மானித்துள்ளன.

இந்நிலையில் இந்த மாபெரும் நிகழ்விற்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Sri Lanka Sports Fiesta  2024 நிகழ்வில் பல முக்கிய அம்சமாகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேசிய அளவிலான கற்பந்தாட்ட கொண்டாட்டம் 16ஆம் திகதி மாலை

6.00 மணி தொடக்கம் 10.00 வரை இடம்பெறவுள்ளதாக இலங்கை காற்பந்தாட்ட சம்மேளணம் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை என்பன கூட்டாக அறிவித்துள்ளன.
 

Leave a comment

Comment