TamilsGuide

சீனாவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சு வார்த்தை

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீன அரசுடன் நேற்று  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்ஹோங்குக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான  எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோருக்கு இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் மிகவும் சுமுகமான  விதத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment