TamilsGuide

சஜித்திற்கு ஆதரவளிக்க மலையக மக்கள் முன்னணி அனுமதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொண்ட தீர்மானத்திற்கு மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை அனுமதி வழங்கியுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொண்ட தீர்மானத்திற்கு மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை அனுமதி வழங்கியுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை தலவாக்கலையில் தனியார் கலாசார மண்டபத்தில் கூடியது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது

இன்றைய கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் விஜயசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், பிரதித் தலைவருமான ஆர்.இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

Leave a comment

Comment