TamilsGuide

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நான்கு பேருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் ஒன்றன்பின் ஒன்று மோதுண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூன்று பேரும் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.
 

Leave a comment

Comment