TamilsGuide

கட்டாக்காலி மாடுகளால் மக்கள் அசௌகரியம்

அம்பாறை, கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாகாலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன்  பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலை வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் கட்டாகாலி மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும்  வாகன சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரை ஆக்கிரமித்து, அசுத்தப்படுத்தி வருவதாகவும் இதனால்  ஏற்படும் துர்வாடை காரணமாக தங்களின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  வர்த்தகர்கள்  விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கால்நடைகளின் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டாலும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் எடுக்க வில்லை எனவும் பொது மக்கள் அங்கலாய்த்துள்ளனர்.
 

Leave a comment

Comment