TamilsGuide

பிரித்தானியாவிற்கான பயணங்கள் தொடர்பில் கனடா அறிவுறுத்தல்

பிரித்தானியாவிற்கான பயணங்கள் தொடர்பில் கனடா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் அமைதியான போராட்டங்கள் கூட வன்முறைகளாக வெடிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலகங்கள், வன்முறைகள், கொள்கைகள் போன்றன இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டங்கள் காரணமாக பொதுப் போக்கவரத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக இந்த பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதனை தவிர்க்குமாறு கனடிய அரசாங்கம், பிரித்தானிய வாழ் கனடியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 
 

Leave a comment

Comment