TamilsGuide

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மக்கள் காங்கிரஸின் தீர்மானம் இன்று

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதுர்தீனும் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவிக்கவுள்ளனர்.

அதன்படி கொழும்பில் பிற்பகல் தமிழ் முற்போக்கு கூட்டணி செய்தியாளர் மாநாட்டை கூட்டி இதனை தெரிவிக்கவுள்ளது

இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதித் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரன் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
 

Leave a comment

Comment