TamilsGuide

இலங்கை மீனவரைக் காப்பாற்றிய தமிழக மீனவர்கள்

நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய  நிலையில் இருந்த இலங்கை மீனவரை தமிழ் நாட்டின், நாகை மீனவர்கள் மீட்டு, அவரை நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் ஒரத்தூரில் உள்ள பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் திருகோணமலையை சேர்ந்த அகமது இர்ஃபான் எனும் 41 வயதுடைய நபரே  இவ்வாறு நாகை மீனவர்களார் மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக கடலோர பாதுகாப்பு பொலிஸார் பாதிக்கப்பட்ட மீனவரிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment