TamilsGuide

கையூட்டல் விவகாரம் -  வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது

கையூட்டல் பெற முயன்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் நேற்று மட்டக்களப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்காகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தை உரிய தரப்பினரிடம் வழங்குவதற்காக 15 இலட்சம் ரூபாவை கையூட்டலாகப் பெற முனைந்த போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதான இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகக் கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment