TamilsGuide

ஜனாதிபதி குறித்து திலும் அமுனுகம பெருமிதம்

”கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த எமது நாட்டை, இரண்டு ஆண்டுகள் எனும் குறுகிய காலத்துக்குள் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும்” என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”உலகில் இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்திரத்தன்மையை அடையவில்லை.

அறிவு, அனுபவம் மற்றும் உலகளாவிய தொடர்புகளின் அடிப்படையில் வீழ்ந்த நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment