TamilsGuide

A.V.மெய்யப்பன் என்றும்,AVM என்றும் பின்னாளில் அறியப்பட்டவர்

அவிச்சி மெய்யப்ப செட்டியார் 28-7-1907ல் பிறந்தவர்.A.V.மெய்யப்பன் என்றும்,AVM என்றும் பின்னாளில் அறியப்பட்டவர்.தமிழ்த் திரைப்பட மும்மூர்த்திகள் என வாசன், எல்.வி.பிரசாத், மெய்யப்பன் ஆகியோர் போற்றப்பட்டனர்.

சினிமா தயாரிப்பாளர்,இயக்குநர், சமுக சேவகர் என போற்றப்பட்ட ஏ.வி.எம்., உருவாக்கிய ஸ்டூடியோ மட்டுமே..மூன்று பரம்பரை கடந்தும்பெயர் சொல்லும் நிறுவனமாக  வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கிறது .

காரைக்குடியில் பிறந்த மெய்யப்பன் சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்னும் கிராமபோன் கம்பெனியை ஆரம்பித்தார்.பின் அதையே சரஸ்வதி சவுண்ட் புரடக்க்ஷன்ஸ் கம்பெனி ஆக்கி அல்லி அர்ஜுனா,பூகைலாஷ்,ரத்னாவளி ஆகிய படங்களை எடுத்தார்.அவை எல்லாம் தோல்வியடைந்தன.

பின் இன்று மந்தைவெளியில் சன் டி.வி.உள்ள இடத்தில்..பிரகதி ஸ்டூடியோ ஆரம்பித்தார்

.என் மனைவி,ஹரிசந்திரா,ஸ்ரீவள்ளி ஆகிய படங்கள் எடுத்தார்.1941ல் சபாபதி என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,காளி என்.ரத்தினம் நடித்த இந்த படம்..இன்றும் டி.வி.,யில் ஒளி பரப்பப்படும் போது பெரும் ஆதரவை பெறுகிறது.நல்ல நகைச்சுவை படம்.

பின் 1945ல் ஏ.வி.எம்., ஸடூடியோ பிறந்தது.காரைக்குடிக்கு ஸ்டூடியோ இரண்டாம் உலகப் போர் போது மாற்றப்பட்டு..பின் மீண்டும் வடபழனியில் இன்றுள்ள இடத்திற்கு மாற்றபட்டது.

1947ல் நாம் இருவர்,1948ல் வேதாள உலகம்,1949ல் வைஜயந்திமாலா அறிமுகத்துடன் வாழ்க்கை ஆகிய படங்கள் வெளியாயின. வாழ்க்கை தெலுங்கில் ஜீவிதம் என்றும், ஹிந்தியில் பாஹர் என்றும் வந்து வெற்றி பெற்றது.

அதற்கு பின் பிரபல தயாரிப்பு நிறுவனமாகி..பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது ஏ.வி.எம்., குறிப்பாக பராசக்தி (சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., அறிமுகம்)அந்த நாள்,களத்தூர் கண்ணம்மா (கமல் அறிமுகம்),அன்னை, அன்பே வா, சர்வர் சுந்தரம் என வெற்றி தொடர்ந்தது.
ஏ.வி.எம்., 1979 ல் அமரரானார்.

பின்னர்..அவரது குமாரர்கள் இன்றுவரை வெற்றிகரமாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை 174 படங்களை ஏ.வி.எம்.தயாரித்துள்ளது.

ஏ.வி.மெய்யப்பன் இயக்குநர் என்பதை விட திறமைசாலிகளைக் கொண்டு வெற்றி படங்களை அளித்த சிறந்த வியாபாரி எனலாம்.

ஏ வி எம் நிறுவனத்தின் நிறுவனரான திரு ஏ வி மெய்யப்பன் 1934 ஆம் ஆண்டு முதலே திரைப்படத் துறையில் இருந்தாலும் இன்றைய சாந்தோம் பகுதி மற்றும் மைலாப்பூரில் 60, தெற்குத் தெரு என்ற முகவரியில் அவர் ஏ வி எம் நிறுவனத்தை துவங்கியது 1945 ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதிதான்.

சென்னையில் இயங்க ஆரம்பித்த ஏ வி எம் ஸ்டுடியோ மின்சாரத் தேவை காரணமாக காரைக்குடிக்கு மாற்றப்பட்டு அங்கே செயல்பட்டு, நாம் இருவர் படத்தை தயாரித்து 14.01.1947- ல் வெளியிட்டார் மெய்யப்பன். இந்தப் படத்தில் முதன் முதலாக பாரதியார் பாடல்கள் உரிமை பெற்று பயன்படுத்தியதோடு , பின்னர் அவற்றை நாட்டுடமையாகவும் ஆக்கினார். 1948 ஆண்டு வேதாள உலகத்தை வெளியிட்டு விட்டு ஸ்டுடியோவை சென்னைக்கு கொண்டு வந்தார்.

1948 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சென்னை ஏ வி எம் ஸ்டுடியோ நிறுவனம் காலமாற்றங்களுக்கு ஏற்ப தன்னையும் புதுப்பித்துக் கொண்டு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி, பெங்காலி , சிங்களம் ஆகிய மொழிகளில் 175 படங்களுக்கு மேல் தயாரித்து உள்ளது. இவற்றுள் நாம் இருவர் , வேதாள உலகம், சபாபதி , ஸ்ரீவள்ளி , வாழ்க்கை (3 மொழிகள்) ஆகிய படங்களை மெய்யப்பனே இயக்கி இருந்தார் . 

இவர் தயாரித்த பக்த பிரகலாதா படம் தமிழ், தெலுங்கு , கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டது

ஏவி எம் நிறுவனம் தயாரித்த ஹம்பஞ்சி ஏக் டால்கே என்ற இந்திப்படம் 1957 ஆம் ஆண்டு சிறந்த குழந்தைகள் படத்துக்கான பிரதமரின் தங்க மெடலைப் பெற்று, நேருவால் பாராட்டப்பட்டது . ராஜ் கபூர் நர்கீஸ் நடித்த சோரி சோரி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஷங்கர் ஜெய்கிஷனுக்கு பெற்றுத் தந்தது. அந்த நாள் , பாவ மன்னிப்பு, தெய்வப்பிறவி ,.
 சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் சிறந்த படத்துக்கான மத்திய அரசின் சான்றிதழ் பெற்றன
அன்னை , நானும் ஒரு பெண் , குழந்தையும் தெய்வமும் , ராமு ஆகிய படங்கள் சிறந்த படங்களுக்கான மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம் பெற்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125 ஆவது படமான உயர்ந்த மனிதனுக்கு தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது மட்டுமின்றி ”பால் போலவே..” பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பி.சுசீலாவுக்கு பெற்றுத் தந்தது.
சம்சாரம் அது மின்சாரம் சிறந்த ஜனரஞ்சக படத்துக்கான மத்திய அரசின் தங்கப் பதக்கம் பெற்றது.
இப்படி விருதுகள் ஒரு பக்கம் இருக்க… பல தொழில் நுட்ப விஷயங்களுக்கும் முன்னோடியாக இருந்துள்ளது ஏ வி எம் நிறுவனம்.
பின்னணி பாடுவது (play back singing), பின்னணிக் குரல் பேசுவது (dubbing) போன்றவற்றை இந்தியத் திரையுலகில் அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனம்தான் . 1937 ஆம் ஆண்டு ஏ வி எம் தயாரித்த நந்தகுமார் படத்தில் பின்னணி பாடிய லலிதா வெங்கட் ராமன்தான் இந்தியாவின் முதல் பின்னணிப் பாடகி. 1938 கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட ஹரிச்சந்திரா படமே இந்தியாவின் முதல் டப்பிங் படம்.
நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரோடு சேர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் செய்தது ஏ வி எம் தான் .
சிவாஜி கணேசன் மட்டுமல்லாது எஸ் எஸ் ராஜேந்திரன் (பராசக்தி), டி ஆர் மகாலிங்கம் (நந்தகுமார் — ஸ்ரீவள்ளி) கலைஞானி கமல்ஹாசன் (களத்தூர் கண்ணம்மா) , வைஜயந்தி மாலா (வாழ்க்கை), சிவகுமார் (காக்கும் கரங்கள்), ஓர் இரவு (நாகேஸ்வரராவ்), வி.கே.ராமசாமி (பராசக்தி), விஜயகுமாரி மற்றும் ராஜ கோபால் (குலதெய்வம்) ஏ வி எம் ராஜன் , புஷ்பலதா , கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் (பேடர கண்ணப்பா) பண்டரி பாய், மைனாவதி முதலிய நடிக நடிகையரையும்…..
ஏ டி கிருஷ்ணசாமி, எம் வி ராமன், ப.நீலகண்டன் , கே .சங்கர் , திரு .பீம்சிங், ஏ.சி.திருலோகச்சந்தர், எஸ் பி முத்துராமன் , ராம.நாராயணன், ராஜ சேகர் போன்ற இயக்குனர்களையும் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தது ஏ வி எம் நிறுவனமே .

ஓர் இரவு படத்தில் அறிஞர் அண்ணா, பரசாக்தியில் கலைஞர் கருணாநிதி, அன்பே வா படத்தில் எம் ஜிஆர் , மேஜர் சந்திரகாந்த், அநாதை ஆனந்தன் , எங்க மாமா ஆகிய படங்களில் ஜெயலலிதா, பூகைலாஸ் , ராமு ,சிட்டி செல்லுலு, சங்கம் , பக்தி மகிமா ஆகிய படங்களில் என் டி ராமராவ்…… இப்படி ஐந்து முதல்வர்கள் பணியாற்றிய ஒரே சினிமா நிறுவனம் ஏ வி எம் நிறுவனம்தான்..
இந்தியில் ராஜ்கபூர், சுனில்தத் , அசோக்குமார், நர்கீஸ், மீனாகுமாரி,தர்மேந்திரா , ஜிதேந்திரா, தெலுங்கில் நாகேஸ்வரராவ் , கிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோர் நடித்த படங்களை தயாரித்த இந்த நிறுவனம்
சிவாஜி அவரது மகன் பிரபு, 
சிவகுமார் அவரது மகன் சூர்யா , குமாரி ருக்மணி, அவரது மகள் லட்சுமி அவரது மகள் ஐஸ்வர்யா என்று தலைமுறைகளாகத் தொடரும் நடிகர்களை வைத்து படம் தயாரித்து இருக்கும் ஏ வி எம் நிறுவனத்தை உருவாக்கி வளர்த்த ஏ வி மெய்யப்பனின் தொண்டினை பாராட்டி மத்திய அரசு 2006 ஆம் ஆண்டு தபால்தலை வெளியிட்டது . தென்னிந்திய வர்த்தக சபை சிலை நிறுவியது.
 

Leave a comment

Comment