TamilsGuide

முல்லைத்தீவு பொதுச் சந்தையில் தீ விபத்து

முல்லைத்தீவு பொதுச் சந்தை கடைத்தொகுதியில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இத் தீ விபத்தினால்  இரண்டு கடைகள் மற்றும் ஒரு களஞ்சியசாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீவிபத்துக்கான காரணம் இது வரை வெளிவராத நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில்  தீயணைப்புப்  பிரிவின் சேவையை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment