TamilsGuide

கிளிநொச்சியில் காணி அபகரிப்பு - பொதுமக்கள் போராட்டம்

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளப்  பகுதியை  ஆக்கிரமிப்பதைத்  தடுக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் ஆக்கிரமிப்புப் பகுதிக்கு முன்பாக கவனயீர்ப்புப்  போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கனகாம்பிகைக்குள கமக்காரர் அமைப்பினர்  கிராம மக்கள் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற பகுதியைப் பார்வையிடுவதற்காக மாவட்ட அரசாங்கதிபர் எஸ் -முரளீதரன் கரைச்சி பிரதேச செயலாளர். முகுந்தன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது காணி ஆக்கிரமிப்பவரின்  ஆவணத்தை கோரியிருந்தனர். எனினும் உரிய ஆவணம் இன்மையால் பொலிஸாரிடம்,  பரவப்பட்டுள்ள கிரவல்களை அகற்றுமாறு மாவட்ட அரசாங்கதிபர்  அறிவுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment