TamilsGuide

மகளிர் ஆசிய சம்பியன் பட்டத்தை முதல் தடவையாக சுவீகரித்த இலங்கை

2024 ஆம் ஆண்டு மகளிருக்கான ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி முதல் முறையாக சுவீகரித்து சாதனை படைத்துள்ளது.

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற 9 ஆவது மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின.

இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Smriti Mandhana அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Kavisha Dilhari 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Harshitha Samarawickrama ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Chamari Athapaththu 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் இந்திய மகளிர் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தைத் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment