TamilsGuide

அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று முன்நிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின், அலுவலகத்திற்கு இன்று காலை 10.00மணிக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவிக்கு இவ்வாறு புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது உரிமைக்காக போராடுவோரை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment