TamilsGuide

பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை சந்தித்த நடிகர் ராம் சரண்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றுப் போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹாவை வீழ்த்தினார்.

இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.

இப்போட்டியை நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா நேரில் கண்டுகளித்தனர். போட்டி முடிந்ததும் பி.வி.சிந்து உடன் ராம் சரண், உபாசனா புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த படத்தை ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு முன்னதாக பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் ராம் சரண், அவரது மனைவி உபாசனா மற்றும் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment