எதிர்வரும் ஆகஸ்ட் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில்
'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024' இடம்பெற இருக்கிறது.
நாற்பதுக்கும் மேற்பட்ட காட்சியறைகளில், இலங்கையிலிருந்துமட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறுபட்ட புத்தக விற்பனை நிறுவனங்கள் மற்றும் வெளியீட்டகங்களின் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்தக் கண்காட்சி விற்பனையில் எங்கட புத்தகங்கள் பங்குபற்ற உள்ளது. ஈழத்து நூல்களுக்கான காட்சியறையாக, 1000த்துக்கும் அதிகமான தலைப்புகளில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள், சஞ்சிகைகளுடன் எங்கட புத்தகங்கள் காட்சியறை அமையவுள்ளது.