TamilsGuide

22 சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை - வவுனியாவில் போராட்டம்

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 22 சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகத்  தெரிவித்து வலயக்கல்வி பணிமனை முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது 22 சிங்கள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரமாக இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment