TamilsGuide

வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் பாடகி கே. சுஜீவா

அத்துருகிரிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் உயிரிழந்ததோடு, பிரபல பாடகி கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கே. சுஜீவா பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர், கட்டண வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் தற்போது குணமடைந்து வருவதால், வைத்தியசாலையில் இருந்து வெளியேறி தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment