TamilsGuide

தங்க நகை அடகு வைத்தவர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாட்டில் அண்மைக் காலமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதுடன், இதனால் தங்க நகைகள் அடகு வைக்கப்படுவதும் வேகமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் சுமார் 210 பில்லியன் ரூபாயாக இருந்த அடகு முற்பணங்களின் நிலுவைத் தொகை, 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 172 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது, 571 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் 30, அல்லது அதற்கு முன் உரிமம் பெற்ற வங்கிகளிலிருந்து தனிநபர் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பெற்ற 100,000 ரூபாயிற்கும் அதிகமாக அடகு முற்பணங்களுக்கு, ஆண்டுக்கு அதிகபட்சமாக 10 வீதத்திற்கு உட்பட்டு, வட்டி மானியத்தை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment