TamilsGuide

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2024-2026 காலப்பகுதிக்கான இயக்குனர் சபை தேர்ந்தெடுக்கப்பெற்றது

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் 20-07-2024 சனிக்கிழமை காலை 10:45 மணிக்கு Frontline Community Centre  (3031 Markham Road , Unit 27) மண்டபத்தில் நடைபெற்றது.

2022-2024 காலத்திற்கான தலைவர் அகணி சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தலைவராக திரு ரவீந்திரநாதன் கனகசபை அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக முனைவர் வாசுகி நகுலராஜா தெரிவு செய்யப்பட்டார். பொருளாளராக திரு இராச்குமார் குணரட்ணம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். துணைத்தலைவராக திரு குரு அரவிந்தன் அவர்களும் , துணைச்செயலாளராக திரு ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். நிர்வாக சபை உறுப்பினர்களாக திரு அகணி சுரேஸ், திரு ஜெயானந்தசோதி செல்வா, திருமதி கமலவதனா சுந்தா, திருமதி சிவசோதி ஜெயகுமார், திருமதி ராஜினி சுபாகரன், திருமதி நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இணையத்தின் காப்பாளர்களாக திரு சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், திரு தங்கராசா சிவபாலு ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். 

Leave a comment

Comment