TamilsGuide

காத்தான்குடியில் கைக்குண்டொன்று கண்டெடுப்பு

காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீட்டுக்கு அருகில் கைக்குண்டொன்று நேற்று பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி, பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஹா பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முன்பாக காணப்பட்ட வடிகானுக்கு அருகிலேயே  குறித்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் கைக் குண்டைக்  கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதி இரவு இனம் தெரியாத நபர்களினால் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைக்  காத்தான் குடிப் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment