TamilsGuide

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

தந்தை செல்வா கலையரங்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தேசிய மாநாடு இடம்பெற்றது

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர்.கணேசலிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சர்வேஸ்வரன் , யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் உள்ளிட்டவர்களுடன் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment