TamilsGuide

மூதுார் விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு

யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்கள் குழுவொன்றை ஏற்றிச்சென்ற பேருந்து  விபத்துக்குள்ளானதில் 64  பேர் காயமைடைந்துள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து மூதூர் – கெங்கே பாலத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது.

பேருந்தில் பயணித்த பயணிகள், சாரதி உட்பட 51 பேர் காயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment