TamilsGuide

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது,  விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது , தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த வேளை அங்கு முறையான அனுமதியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த  4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். குறித்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment