TamilsGuide

விலைமனு கோரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உரிமையை மாற்றுவதற்கு தற்போது நடைமுறையில் இருந்த விலைமனு கோரும் நடவடிக்கையை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு பிரிவு, ஜூலை 9 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இந்த ஏல முறைக்குப் பதிலாக மாற்று முறையைக் கடைப்பிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும்  குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment