TamilsGuide

அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு நன்கொடை வழங்கிய அமெரிக்கா

காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அனர்த்தங்கள் மற்றும் அவசர சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு உதவும் அவசியமான உபகரணங்களை, அமெரிக்க அரசு இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணியகத்தின் நிதியுதவியின்கீழ்  இலங்கைக்கு இந்த உபகரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக உணவுத்திட்டத்தின் விசேட நடவடிக்கைகளுக்காக அமெரிக்க முகவரகத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதியின் ஒருபகுதியே மேற்குறிப்பிட்ட உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment