TamilsGuide

22 வது திருத்த சட்டமூலத்தை தேர்தல் நிறைவடையும் வரை வெளியிட வேண்டாம்

இருபத்து இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

‘ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுமோ’ என்ற  மக்கள் மத்தியில்  எழுந்துள்ள அச்சத்தைப் போக்கவே குறித்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் அவசர அவசரமாக இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment