TamilsGuide

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோ கிராம் உளுந்து 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

400 கிராம் நிறையுடைய பால்மாவின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 910 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய வெள்ளை சீனி கிலோவொன்று 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

வெள்ளை அரிசி கிலோ ஒன்று 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாகும்.
கீரி சம்பா கிலோவொன்று 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 258 ரூபாவாகும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment