TamilsGuide

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் நலன் கருதி புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk  என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment