TamilsGuide

கனடாவாழ் தென்மராட்சி-விடத்தற்பளை மக்களின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல்

கனடாவாழ் தென்மராட்சி-விடத்தற்பளை மக்களின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வானது 2 Rozell Rd, Scarborough, M1C 2L1, Ontario என்ற முகவரியில் அமைந்திருக்கும் Adams Park(Shelter-A) இல் இடம்பெற்றது. 
அன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கையிலிருந்து வருகைதந்திருக்கும் திரு. சிவக்கொழுந்து சிவசொரூபன்- கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் அவர்கள் இணைந்து  சிறப்பித்திருந்தார். 
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு. பத்மகாந்தன் சரவணமுத்து அவர்கள் துணைவியார் சகிதம் 
மங்கலவிளக்கேற்றி ஒன்றுகூடலினை இனிதே ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து தேவாரம், கனடா தேசிய கீதம் போன்றன இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு நிமிட அகவணக்கம் இடம் பெற்றது.  

அதனைத் தொடர்ந்து ஒன்றியத்தின் செயலாளர்  திரு. பாலச்சந்திரன் பாலசிங்கம் அவர்களது செயலாளர் ஆண்டறிக்கை மற்றும்  ஒன்றியத்தின் பொருளாளர் திரு.பிரதீபன் சண்முகநாதன் அவர்களது பொருளாளர் அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஒன்றியத்தின் தலைவர் திரு.நடராசா உதயகுமார் அவர்களின் தலைமை உரை இடம்பெற்றது. 
தொடர்ந்து பிரதம விருந்தினர் கௌரவிப்பும், பிரதமவிருந்தினரின் சிறப்புரையும் இடம்பெற்றது.
தொடர்ந்து திருமதி. ஜோதி ஜெயக்குமார் ஒன்றியத்தின் காப்பாளர் உரையினை வழங்கி, ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவினை நடாத்தி வைத்தார். புதிய நிர்வாக சபைத்தேர்வு சிறப்பாக நடைபெற்றது. 
பல வகை சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன. ஏலங்கோரலும், அதிஷ்ட்ட இலாபச் சீட்டிழுப்பும் கலகலப்பான முறையில் இடம்பெற்றது.
ஒன்றியத்தின் புதிய இயக்குனர் சபை:-
1)தலைவர்
திரு.உதயகுமாரன் நடராஜா
2)செயலாளர்
திரு.பாலச்சந்திரன் பாலசிங்கம்
3)பொருளாளர்
திரு.பிரதீபன் சண்முகநாதன்
4)கணக்காய்வாளர்
திரு.கார்த்திகன் நடராசா
5)உபதலைவர்
திரு.கருணாகரன் வேலுப்பிள்ளை
6)உபசெயலாளர்
திரு.ஜெயக்குமார் சோமசுந்தரம்
7)உப பொருளாளர்
திரு.கருணாகரன் சின்னத்துரை
8)விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்
திரு.உதயநந்தன் கந்தசாமி
Committee Members:-
1)திரு.செந்தூரன் குணசிங்கம்
2)திரு.உதயமூர்த்தி கந்தையா
3)திருமதி.இராஜநாயகி கெங்காதரன்
4)திரு.நடேசலிங்கம் தம்பிஐயா
5)திரு.தங்கராஜா சிவதரன்
6)திருமதி. உஷாந்தினி தனோஜன்
7)திருமதி. உதயரஜனி ஶ்ரீகிருஷ்ணரூபன்
ஒன்றியத்தின் காப்பாளர்கள்
1)திரு.v.vin.மகாலிங்கம்
2)திருமதி.ஜோதி ஜெயக்குமார்
 

 

Leave a comment

Comment