TamilsGuide

முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி பிரயோகம்

அம்பலங்கொடை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த  துப்பாக்கி பிரயோகம் இன்றிரவு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் 41 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் 19 வயதிற்குட்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் வீரரான தம்மிக்க நிரோசன் என்பவரே உயிரிழந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment