TamilsGuide

துப்பாக்கிச்சூட்டுக்கு பின் மீண்டும் பொதுவெளியில் தோன்றிய டொனால்ட் டிரம்ப்

பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் பிரசாரத்தில் ஈடுப்படிருந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபடி டொனால்ட் டிரம்பை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சூட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது டிரம்பின் வலது காதில் ஏற்பட்ட காயத்துடன் அவர் உயிர் தப்பினார். எனினும் அவரது ஆதரவாளர்களில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

இதேவேளை, டிரம்பை துப்பாக்கியால் சுட்ட பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் நகரை சேர்ந்த தாமஸ் மேத்யூ என்ற 20 வயது வாலிபர் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். 

இந்த சம்பவத்திற்கு பல்வேறு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மில்வாக்கி பகுதியில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று டிரம்ப் கலந்து கொண்டார்.

78 வயதான டிரம்ப், துப்பாக்கி சூடு சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இது என்பதால், நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவரது காதில் துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் டிரம்பு உரையாற்றவில்லை. 

அங்கு திரண்டிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தவாறு அவர்களது வரவேற்பை டிரம்ப் ஏற்றுக்கொண்டார். 
 

Leave a comment

Comment